Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மேட்டூர்: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிலையில், முதல் பிரிவில் 3வது அலகில் நேற்று முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும் என மேட்டூர் அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.